எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

ருத்ராக்ஷம் வில்வம் கோலம்.RUDHRAKSHA VILVAM KOLAM

காரைக்குடிப் பக்கங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவுடு எனப்படும் ருத்ராக்ஷத்தை அணிந்திருப்பார்கள். ருத்ராக்ஷத்தில் ஒரு முகத்திலிருந்து 6 முகம் வரை உண்டு. ஒரு முகம் ரொம்ப விசேஷம்.

இதில் தங்கம் வெள்ளி ஏதேனும் பிடித்து சிவப்புக் கயிற்றில் கழுத்தில் சங்குக்குக் கீழே வரும்படி அணிந்திருப்பார்கள்.

இதிலிருந்து தண்ணீர் பட்டு உடலில் சேர்ந்தால் நன்மை என்ற ஐதீகம்.

நோய் நொடி எதுவும் அண்டாமல் கண்டத்தைக் காப்பதால் இதற்குக் கவுடு என்று பெயர்.

வில்வம் சிவனுக்கு உகந்த பத்ரம். இவை இரண்டையும் இணைத்து இந்தக் கோலத்தைப் போட்டுள்ளேன்.

நேர்ப்புள்ளி 12 புள்ளி 12 வரிசை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...